தூத்துக்குடி ராதாகிருஷ்ணன் ஆலயமான நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ராதாகிருஷ்ணன் பிருந்தாவன வாழ்க்கை மற்றும் கோபியர்களுடனான ஆன்மிகச் சூழலை நினைவூட்டும் வகையில் மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ராதாகிருஷ்ணரை சுற்றி கோபியர்கள் நடனமாடி இருப்பது போன்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 26ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி ஸ்ரீமத் பாகவதம் பாராயணம், மதுரகீதம், வெவ்வேறு வாகனத்தில் ராதையும் கிருஷ்ணரும் வீதி உலா வரும் நிகழ்ச்சி, ஆன்மிக அருளுரை நடைபெற்று வருகின்றன. ஏழாம் திருநாளான ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ராமசாமி பாகவதாரின் ஆன்மீக அருளுரை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாள் விழாவில் வரும் மூன்றாம் தேதி ஸ்ரீ ராதாகல்யாணம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா