தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
தவெக ஆட்சியில் பெண்கள் மீதான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்கள் இன்னும் ரீல்ஸ் மோகத்தில் இருந்து வருகின்றனா். தூத்துக்குடி முடிவைத்தானந்தல் பகுதியில் பணியிடத்தில் பெண் ஒருவர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக தலைமைக் காவலரே இந்த படுபாதக செயலை செய்துள்ளார். இதுபோன்று நெல்லை தாழையூத்து பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணை மூன்று நபர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து அப்பெண்ணின் நகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல வள்ளியூர் வடக்கன் குளம் பகுதியில் வீட்டில் இருந்த சிறுமியிடம் வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இப்படி தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இன்றி தொடர்ந்து படுகொலைகளும் பாலியல் சீண்டல்களும் கொள்ளைகளும் அதிகரித்து வருகிறது. பணியிடங்களிலும் பொதுவெளியிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு அசாதாரண சூழல் தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. சிங்கப் பெண் படை எங்கே? என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் முந்தைய திமுக அரசு கொண்டு வந்த எந்த திட்டத்தை நிறுத்தலாம்? எந்த திட்டத்துக்கு பெயர் மாற்றலாம்? என்று சிந்தித்து கொண்டு இருக்கிறது ரீல்ஸ் அரசு. எனவே ஆட்சியாளர்கள் ரீல்ஸ் மோகத்தில் இருந்து விடுபட்டு நிஜ உலகிற்கு வந்து உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.