தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தம்பதியர் நாகராஜன் – பரமேஸ்வரி ஆகியோரின் மகன் அருணாசலம் கடந்த 17ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார். அங்கு விசாரணை செய்த காவலர்கள் இளைஞர் அருணாசலத்தை தலையில் அடித்ததாகவும் அதன் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞர் அருணாசலத்தின் குடும்பத்தினர் காவல்துறை தாக்கியதாலேயே உயிரிழந்தார் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அரசு மருத்துவமனையில் இருந்த அருணாசலத்தின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இளைஞர் அருணாசலத்தின் மரனத்திற்கு நீதி விசாரணை செய்ய வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், நிா்வாகிகள் சொக்கலிங்கம், சம்படி பழனி, சாம்ராஜ், சகாயராஜா, உள்பட பலா் உடனிருந்தனர்.