கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் பவா் ஆப் லா என்ற தலைப்பில் சட்டத்தின் அவசியம், அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகள், மாணவர்களின் சட்டப் பொறுப்புகள், இணையவழி குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, நல்ல குடிமகனின் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து, சட்ட விழிப்புணர்வுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவன ஆலோசகர், சிஜெடி அகாடமியின் பொதுப் பேச்சு பயிற்றுநர் மற்றும் ஊக்கவுரை நிபுணர் சந்துரு டீப் சிக்ரெட் ஆப் கான்சன்ட்ரேஷன் என்ற தலைப்பில் மாணவர்களிடம் கவனச்சிதறலைக் கட்டுப்படுத்துவது, இலக்கை நோக்கிய சிந்தனை, நேர மேலாண்மை, தன்னம்பிக்கை, மன ஒருமைப்பாடு மற்றும் வெற்றிக்கான நடைமுறைகள் குறித்து ஊக்கமூட்டும் வகையில் தனது அனுபவங்களை பகிர்ந்து, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞர் அணித் தலைவர் சகாயராஜ், தெற்கு மாவட்ட தலைவர் சேவியர் பிச்சை, சட்ட உரிமைகள் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், பேராசிரியர்களுக்கும் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வு, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் உறுதியளித்தனா்.