தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீட அறக்கட்டளையில் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித் திட வேண்டி ஸ்ரீவாரஹி அம்மனுக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
பின்னா் ஸ்ரீவாராஹி அம்மன் பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சித்தர் வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்