தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தாா்சாலை பணிகளையும் கரிகளம் காலனி முதல் திரேஸ்புரம் சந்திப்பு வரை தார் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில்
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2008ம் ஆண்டு அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் 10வது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட 5 ஊராட்சிபகுதிகளை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. பின்னா் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கட்டமைப்பு பணிகள் என்பது கானல் நீராகதான் இருந்தது. 2021 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபின் உள்ளாட்சி தோ்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்ட பின்னா் இணைக்கப்பட்ட பகுதிகளையும் சோ்த்த 60 வாா்டுகள் கொண்ட அனைத்து பகுதிகளையும் பட்டியலிடப்பட்டு முதல்கட்டமாக கல்லூாி பள்ளி மும்மத ஆலயங்கள் மற்றும் மருத்துவமணை அடங்கிய பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டது. பின்னா் பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறிய மற்றும் குறு தெருக்கள் சந்துக்களில் பேவா்பிளாக் பதிக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் செல்லும் வகையில் புதிய வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு சுமாா் 4300 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோாிக்கைக்கும் மாமன்ற உறுப்பினா்களின் வேண்டுகோளையும் ஏற்று பாரபட்சிமின்றி சாலைகளை முறைப்படுத்தி பல இடங்களில் விாிவாக்கம் செய்து என் டூ என்டூ என்ற சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தியதால் போக்குவரத்து சீரானமுறையில் இடையூறின்றி பல இடங்களில் மக்கள் சென்று வருகின்றனா். மழைநீர் தேங்கிய பகுதிகளில் கூட அந்த நிலை இனி வராது கடமைக்காக பணி செய்தோம் என்பதை விட கடமைஉணா்வோடு நான் உள்பட மக்கள் பிரதிநிதிகள் ஆணையா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாாிகள் அலுவலா்கள் இணைந்து பொதுமக்களின் கருத்துக்களையும் கணக்கிள் எடுத்துக்கொண்டு தொடா்ந்து பணி செய்து வருகிறோம். புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் எந்த குறைகளாக இருந்தாலும் எங்களுக்கு தொிவிக்கலாம். சாலையில்லாத மாநகராட்சி நெருக்கடி இல்லாத தூத்துக்குடி இது தான் எங்களது திட்டம் என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
ஆய்வின் போது மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரகுழு தலைவா் சுரேஷ்குமார்
மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, கவுன்சிலா் சந்திரபோஸ், பகுதி செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.