தூத்துக்குடி காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்கள் காமராஜர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் தொடக்க விழாவில் தொழிலதிபா்கள் ராஜ்குமார், விநாயகமூர்த்தி, கல்லூாி செயலாளர் சோமு, மற்றும் டாக்டர் பானுமதி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரூ.10,000 ரொக்கப் பரிசுடன் வென்றது. 2-வது பரிசை பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ரூ.7,000 3-வது பரிசை அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகளாபுரம் ரூ.5,000, 4-வது பரிசை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி ரூ.3,000 பெற்றன.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை தஸ்நெவிஸ் மாதா மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ.10,000 ரொக்கப் பரிசுடன் வென்றது. 2-வது பரிசை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் ரூ.7,000 3-வது பரிசை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி ரூ.5,000 4-வது பரிசை விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ.3,000 பெற்றது.
நிறைவு விழாவில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இயக்குநர் அரவிந்த்குமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை காமராஜர் கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் ஆனந்தராஜ், காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜேஷ் தில்லை, துணை தலைவர்கள் வன்னியராஜ் சரவணக்குமார், செயலாளர் விக்னேஷ், துணை செயலாளர்கள் கார்த்திக் செல்வன் சக்திவேல், பொருளாளர் கலையரசி பேராசிரியர்கள் பால்ராஜ், மதனகோபால் ஆகியோர் செய்திருந்தனா்