தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை பயன்பாட்டிற்கு ஏதுவானதாக மாறுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்பாராத வறட்சி காலங்களில் மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தக்கூடிய நீர் நிலைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்டிடத்திலும் மழை நீரை முறையாக சேகரித்து சேமித்து வைக்கும் அமைப்பினை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாக காணப்படுகிறது. எனவே மாநகர பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் சேமிப்பு அமைப்பினை உடனடியாக ஏற்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதுகுறித்து ஏற்படக்கூடிய சந்தேகங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நேரில் கேட்டு செயல்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.