தூத்துக்குடி இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா, தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி இஸ்லாமியர்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இஸ்லாமிய சிறைவாசிகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான நோயினாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். மேலும். சிறைவாசிகளின் விடுதலை ஒட்டு மொத்தம் தமிழக இஸ்லாமியர்களின் எதிர்ப்பார்காக இருக்கின்றன என்பதை இந்த அறிக்கையின் வாய்லாக தெரிவித்து கொள்கிறோம். மேலும்.15 ஆண்டுக்கும் மேலாக சிறை தண்டனை யை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜவாஹீருல்லா தமிமுல் அன்சாரி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து ஆளும் அரசுகளுக்கு கோரிக்கையே முன் நிறுத்தி குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆளும் அரசுகள் செவி சாய்க்காமல் கடந்து சென்று போவது ஏன் ? மேலும் இளமையில் சிறைக்கு சென்ற இஸ்லாமிய சிறைவாசிகள் முதுமை ஆகியும் அவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய முன் வராதது ஏன் ? மேலும் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்கான அனைத்து அதிகாரமும் தமிழக அரசுயிடம் இருக்கின்றன. அப்படி இருக்க இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் தொடர்ந்து கேள்வி குறியாகவே இருந்து வருவது ஏன்? ஆகவே 15 ஆண்டுக்கும் மேலாக தமிழக சிறைகளில் தண்டனையை அனுவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு மறு வாழ்வு கொடுக்கும் வகையில் சட்ட பிரிவு என் 161ன் படி சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
[