Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை 9 மாவட்டங்களுக்கு ஓடிஓபி திட்டம் பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

Last updated: August 7, 2026 2:23 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மத்திய அரசின் ஓடிஓபி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஓடிஓபி திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்வதும், அந்த தயாரிப்புகளுக்கு பிராண்டிங், தரச்சான்றிதழ், நவீன தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், ஏற்றுமதி வசதிகள் மற்றும் நிதி ஆதரவை வழங்குவதுமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வலுப்பெறுவதுடன், கைவினைஞர்கள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் பொருட்கள் உலக சந்தையில் அறிமுகமாகி, ஏற்றுமதி கணிசமாக உயரும். உத்தரப் பிரதேசத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் மூலம், பல மாவட்டங்களின் பாரம்பரிய பொருட்கள் சர்வதேச சந்தையை அடைந்து, ஏற்றுமதி மதிப்பு உயர்ந்ததுடன், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் புத்துயிர் பெற்று, லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதன் வெற்றியே தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கான காரணமாக உள்ளது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 மாவட்டங்களும் ஏற்கனவே தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு இத்திட்டத்தின் முழுமையான ஆதரவு கிடைப்பதன் மூலம், உலகளாவிய முதலீடுகள் அதிகரிக்கவும், ஏற்றுமதி மேலும் உயரவும், புதிய தொழிற்சாலைகள் மற்றும் துணைத் தொழில்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் முன்னிலைப்படுத்தி செயல்படும் மத்திய அரசின் இந்த முயற்சி, மாநிலத்தின் தொழில் துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும், வருங்காலத்தில் தமிழகம் உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உயர்வதற்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று வௌியிட்டுள்ளஅறிக்கையில் அன்னபூர்ணா தெரிவித்துள்ளா்

Share This Article
Email Copy Link Print
Previous Article வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
Next Article திமுக ஆட்சியின் சாதனைகளையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் ாீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் கூற வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

R.தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் அவர்களிடம் வழங்கின போது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ராகுல்காந்தி மீது போலீஸ் வழக்குபதிவு தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?