தூத்துக்குடி 21வது மாநில அளவிலான பாரா சீனியர் தடகள விளையாட்டு போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கத்தில் வைத்து கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாரா விளையாட்டு சங்கம் சார்பாக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனா்.
குண்டறியும் டி20 போட்டியில் முத்துமீனா முதல் தங்கப் பதக்கம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மதீஸ்வரன் 3வது வெண்கலப் பதக்கம், 5000 மீட்டர் டி11 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், 400 மீட்டரில் ஜெயன் முதல் தங்கப் பதக்கம், 200 மீட்டரில் 2வது வெள்ளிப் பதக்கம் 100 மீட்டர் டி36 37 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், குண்டு எறிதலில் காயத்திரி முதல் தங்கப் பதக்கம், ஈட்டி எறிதலில் எஃப்34 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், குண்டறியும் போட்டியில் மலையேஸ்வரி 2வது வெள்ளிப் பதக்கம், கிளப்த்ரோ எஃப் 32 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், 100 மீட்டர் டி35 போட்டியில் நித்ன் சுரேஷ் 3வது வெண்கலப் பதக்கம், 100 மீட்டரில் இசக்கி ராணி 2வது வெள்ளிப் பதக்கம், 200 மீட்டர் டி36 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், ஈட்டி எறிதல் எ“ப் 55 போட்டியில் மகேஸ்வரி 2வது வெள்ளிப் பதக்கம், 400 மீட்டரில் கணேஷ்பாண்டியன் 2வது வெள்ளிப் பதக்கம் டி36 37, 1500 மீட்டர் டி46 ஓட்டத்தில் கார்குவேல்ராஜ் 2வது வெள்ளிப் பதக்கம், டி46 ஈட்டி எரியும் போட்டியில் ரெஜினா பியூலா 2வது வெள்ளிப் பதக்கம், 100 மீட்டரில் முத்துசெல்வி 2வது வெள்ளிப் பதக்கம், டி46 குண்டு எரியும் போட்டியில் 3வது வெண்கலப் பதக்கம், வட்டு எரியும் போட்டியில் எஃப்44 போட்டியில் முத்துகிருஷ்ணன் 2வது வெள்ளிப் பதக்கம், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனா். விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா்,மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முகமது நசீர் துணைத் தலைவர் கான்ஸ்டன்ட் துணை தலைவர் கிறிஸ்டோபர் செயலாளர் ஸ்டீபன் துணைச் செயலாளர் ஜெயலட்சுமி பொருளாளர் நீல ராஜன் ஈட்டி நம்பர் நாவீஸ்வரி ரிஹானா பர்வீன் அஜிஸ் பாராட்டினார்கள். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டி ஒரிசா புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது அதில் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.