தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக காலை விளாத்திகுளத்தில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில்
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல்துறையினர் அவரை சந்திக்க விடாமல் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தள்ளுமுள்ளு ஏற்பட்டது மேலும் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், எம்எல்ஏவை பார்க்கவிடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை அவர் கையில் ஒரு தொலைபேசி கூட வைத்திருக்க அனுமதி இல்லை மேலும் அவருடைய உதவியாளரை பார்க்க அனுமதிக்கவில்லை வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்க வில்லை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க இதுவரை அனுமதிக்கவில்லை அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது அவருக்கு உடல் நிலையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது முதுகு வலி உள்ளது போலீஸ் அராஜகம் மேலே இருந்து உத்தரவு வரவேண்டும் என்று கூறுகிறார்கள் இங்கே கேட்டால் தெரிகிறது இங்கே உள்ள யாருமே முடிவெடுக்க முடியவில்லை.. சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்காமல் எவ்வாறு கைது பண்ண முடியும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்க்கவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். போலீஸ் கட்டுக்கடங்காத அளவுக்கு அராஜகம் மற்றும் அடக்கு முறையை தவிர்த்து விட்டு விடுகிறார்கள் எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் எங்களுடைய தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினரை பார்த்து விட்டு வர சொன்னார் ஆனால் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. சட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் தமிழக வெற்றிகழக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை விசாரிக்க கூட இல்லை இந்த அளவுக்கு ஒடுக்குமுறை அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் தமிழக வெற்றி கழக அரசு மாதா கோவில் பொருட்காட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டு இருக்கிறாா்கள் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை பழனி கோயில் பட்டா போட்டவர்கள் மீதும் இதுவரை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எந்த அளவிற்கு இவர்கள் அடக்கு முறையை கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறினாா்.
பாக்ஸ்: மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ கைதையொட்டி தூத்துக்குடி திருநெல்வேலி, பிரதான மெயின்சாலையில் 3ம் மைல் பாலம் அருகில் காவல் துறை சாா்பில் தடுப்பு அமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களை அச்சுறுத்தியும் திமுகவினரை பல தடுப்புகள் மூலம் சென்று விடாமல் இருக்கவும் முழுமுயற்சியை மேற்கொண்ட காவல்துறை திங்கள் கிழமை குறைதீர்க்கும் நாளன்று இந்த நிகழ்வு நடைபெற்றதால் கலெக்டா் அலுவலகம் எஸ்.பி அலுவலகம் இரண்டும் அருகில் அமா்ந்திருப்பதால் பிரதான சாலை வழியாக சென்ற பலரையும் வௌியே காரை நிறுத்தி விட்டு செல்லுங்கள் நீங்கள் யாராக இருந்தால் எங்களுக்கு என்ன என்று பலரையும் ஓருமையில் பேசி காவல்துறையினா் செயல்பட்டது மட்டுமின்றி பத்திாிகையாளா்கள் பலரையும் பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தி தேவையற்ற செயல்களின் மூலம் திமுகவின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சோ்ப்பதை தடுக்கும் வகையில் காவல்துறை திறமையாக செயல்படுவதில் கவனமாக இருந்தது.