Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

எப்சிஆர்ஏ சட்டம் வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்தும் சட்டமே, கட்டுப்படுத்தும் சட்டமல்ல – டாக்டர் சுதா விளக்கம்

Last updated: August 14, 2026 10:08 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி எப்சிஆர்ஏ சட்டம், இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களை பொதுவாக கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அல்ல வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் பங்களிப்புகள் முறையாகவும், வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டம் என பா.ஜ., கார்யகர்த்தா டாக்டர் சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எப்சிஆர்ஏ எனப்படும் Foreign Contribution (Regulation) Act, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நன்கொடைகள் மற்றும் பிற பங்களிப்புகள் எந்த நோக்கத்திற்காக பெறப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அதற்கான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து ஒழுங்குபடுத்துகிறது. இந்தியாவில் செயல்படும் ஒரு என்ஜிஓ வுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நன்கொடைகள் பொதுவாக எப்சிஆர்ஏ வின் கீழ் வெளிநாட்டு பங்களிப்பாகாது. ஆனால், அதே அமைப்புக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைத்தால், அந்த நிதி எப்சிஆர்ஏ விதிகளுக்கு உட்படும். உதாரணமாக, ஒரு என்ஜிஓ இந்தியாவில் இருந்து ரூ.20 லட்சம் நன்கொடை பெற்று ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கினால், அது உள்நாட்டு நிதியாகும். அதே அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனம் ரூ.50 லட்சம் வழங்கினால், அது வெளிநாட்டு பங்களிப்பாகும். அந்த நிதியை பெறவும், பயன்படுத்தவும் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதி மருத்துவ உதவி, கல்வி உதவி, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறாக நிதி பயன்படுத்தப்பட்டால், அது சட்டரீதியான பிரச்னைக்கு வழிவகுக்கும். வெளிநாட்டு பங்களிப்பைப் பெறும் அமைப்புகளின் தகுதியை ஒழுங்குபடுத்துதல், பதிவு மற்றும் முன் அனுமதி நடைமுறைகளை வகுத்தல், நிதியின் வரவு–செலவு குறித்த கணக்குப்பதிவை உறுதி செய்தல், விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வழிவகுத்தல் ஆகியவை எப்சிஆர்ஏ வின் முக்கிய அம்சங்களாகும். ஒரு என்ஜிஓ சமூக சேவை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது என்பதற்காக மட்டும் எப்சிஆர்ஏ அந்த அமைப்பை கட்டுப்படுத்துவதில்லை. வெளிநாட்டு பங்களிப்பை பெறும்போது, அந்த நிதியின் வரவு மற்றும் பயன்பாட்டை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே எப்சிஆர்ஏ வின் நோக்கம். ஒரு அமைப்பின் எப்சிஆர்ஏ பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது வெளிநாட்டு நிதி பெறுவதற்கான அனுமதி இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அந்த அமைப்பின் அனைத்து சமூகப் பணிகளும் தானாகவே சட்டவிரோதமாகிவிடும் என்று அர்த்தமல்ல. வெளிநாட்டு பங்களிப்பை பெறுவதற்கான எப்சிஆர்ஏ விதிகளை பின்பற்ற முடியாத நிலையே ஏற்படும். சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு நிதி ஆதாரங்கள் மூலம், பிற சட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கைகளை தொடர முடியும். எனவே, எப்சிஆர்ஏ என்பது என்ஜிஓ க்களை ஒடுக்குவதற்கான சட்டம் அல்ல; வெளிநாட்டு பங்களிப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம். வெளிநாட்டு நிதியின் மூலம், வரவு, பயன்பாடு, கணக்குப்பதிவு மற்றும் சட்டப்பூர்வத்தன்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இதன் அடிப்படை நோக்கம். இவ்வாறு டாக்டர் சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்
Next Article தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகி காங்கிரஸில் ஐக்கியம்

You Might Also Like

தூத்துக்குடிவிளையாட்டு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?