தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் கடந்த 19 20 21 ஆகிய நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அதில் ஓரு பகுதியான நிகிலேஷன் நகர் பி அண்டி காலணி, உள்பட பல்வேறு பகுதியில் இரவு கழிவுநீர் கால்வாய் அமைப்பது தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்வை சம்பந்தமாக நேரில் சென்று பகுதியை ஆய்வு செய்த பின் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ரூரல் பகுதி அமைக்கப்பட்டபின் எவ்வீத கட்டமைப்புபணிகளையும் முறையாக செய்யவில்லை. 2021ல் திமுக ஆட்சி அமைத்தபின் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்ககைகளை மேற்கொண்டு நீதி ஓதுக்கீடுசெய்தும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தேங்கக்கூடாது பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று கூறியதின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை போல் இந்த ஆண்டு இதுவரை கூடுதலாக 9 சென்டிமீட்டா் வரை மழை பெய்துள்ளது. சில காலி மணைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்றப்படி புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதின் வழியாக தண்ணீர் வௌியேறி சென்றுவிட்டது. சில பகுதிகளில் மட்டும் மின்மோட்டாா் மூலம் வௌியேற்றப்பட்டுள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது தமிழகத்திற்கு அது தான் பொற்காலம் காரணம் அனைத்து தரப்பினருக்கும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான உாிமைகளை ஓன்றிய அரசிடம் போராடி சில உாிமைகளை பெற்று தரும் கொள்கையோடு முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருவதால் தமிழ்நாட்டில் தமிழா்களின் நலன் மட்டுமின்றி அனைவரின் உாிமையும் பாதுகாக்கப்படுகிறது. எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் எவ்வித அச்சப்பட தேவையில்லை. என்று கூறினாா்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலா்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், வேல்முருகன், மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.
படம்: தூத்துக்குடி நிகிலேஷன் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.