தூத்துக்குடி விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, குளத்தூர் காமராஜர் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் 62-ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டியினை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோா் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், பேரூர் செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீநிவாசன் மாவட்ட பிரதிநிதி செல்வபாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாய பெருமாள், வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் கிளைச் செயலாளர்கள் முருகேசன், பேச்சிமுத்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் பேரூர் வார்டு செயலாளர் மாரிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனர்