தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாக மதித்து, தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடு. அதே நேரத்தில், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய சங்கங்களையும், நிபுணர்களையும் ஒன்றிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, ஒருமித்த தீர்மானத்துடன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது. மேலும், மேகதாது அணை தொடர்பான எந்த நடவடிக்கையும் தமிழகத்தின் நீர் உரிமையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். காவிரி நீர் என்பது அரசியல் பிரச்சினை அல்ல தமிழகத்தின் வாழ்வுரிமை. கட்சிகள் மோதுவதை நிறுத்தி, தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை