தூத்துக்குடி சென்னை எழும்பூாில் உள்ள சிஎம்டிஏ டவா் 2 வில் உள்ள தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கேஎன் பாட்ஷா தலைமையிலான ஆணவக் கொலைகள் தடுப்பு ஆணையத்தில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கிராஜா தேவர் ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவை நேரில் சந்தித்து பிசி எம்பிசி மக்களின் ஒட்டுமொத்த மன குமுரலை வெளிப்படுத்தும் 470 பக்கங்கள் கொண்ட ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டாம் என்கிற தலைப்பில் ஒரு வரைவு அறிக்கையையும் ஆணவக் கொலைகளுக்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படுவதனால் பெண்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் கல்வி போன்றவை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கும் 37 பக்க துணை அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
தூத்துக்குடி பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம், இளம் வயது உறவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் பசும்ெபான் மக்கள் ேதசம் கட்சி நிறுவனர் –தலைவர் இசக்கி ராஜாேதவர் பாட்ஷா ஆணையத்திடம் வழங்கிய துணை அறிக்கையில் கூறியிருப்பதாவது
பெண்களின் உயிர் பாதுகாப்பு என்பது ஒரு சமூகத்தின் நாகரிகத்தின் அளவுகோல். பெண்களின் கல்வி, பொருளாதார சுயநிலை, மனநல பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு, திருமணத் தேர்வு உரிமை, ஏமாற்றமற்ற உறவு வாழ்க்கை, வன்முறை இல்லாத குடும்ப சூழல் ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆணவக்கொலை விவாதத்தில் பெரும்பாலும் பேசப்படுவது காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு, பெற்றோர் எதிர்ப்பு, சாதி அடையாளம், தனிச்சட்டம் தேவைதானா என்ற கேள்வி. ஆனால் இந்த விவாதத்தில் பலமுறை புறக்கணிக்கப்படும் இன்னொரு ஆழமான கோணம் உள்ளது. அது பெண்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றம் காதல், ஏமாற்றம், இளம் வயது உறவு அழுத்தம், திருமண வாக்குறுதி மோசடி, கர்ப்பமாக்கி கைவிடுதல், காதலிக்க மறுத்ததால் தாக்குதல் அல்லது கொலை, தனிப்பட்ட புகைப்பட வீடியோ மிரட்டல், குடும்பத்திலிருந்து பிரிவு, படிப்பு நிறுத்தம், பொருளாதார சார்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வி. இந்த அறிக்கை பெண்களின் சுய தேர்வு உரிமையை மறுப்பதற்காக அல்ல. சட்டப்படி வயது வந்த பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டவர். அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பெண்ணின் பெயரில் பேசப்படும் உரிமை, அவளது கல்வி முறிவடையவும், அவள் வேலைவாய்ப்பை இழக்கவும், அவள் பொருளாதாரமாக ஒருவர் மீது சார்ந்துவிடவும், அவள் மன அழுத்தத்தில் சிக்கவும், ஏமாற்றப்பட்ட உறவுக்குப் பிறகு கர்ப்பம், அவமானம், கைவிடப்பட்ட நிலை, சமூக அழுத்தம், தற்கொலை எண்ணம், சட்டப் போராட்டம் ஆகியவற்றில் விழவும் வழிவகுக்கக்கூடாது. பெண்ணின் சுய உரிமை, கல்வியும், காதல் தேர்வும் சட்ட உரிமை எதிர்கால பொருளாதார சுயநிலையும் சம்மதம் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மோசடி, வற்புறுத்தல், பொய்யான திருமண வாக்குறுதி, கர்ப்பமாக்கி கைவிடுதல், காதலிக்க மறுத்ததால் கொலை, தனியுரிமை மிரட்டல் போன்றவை பெண்கள் மீதான கடுமையான குற்றங்களாகவே பார்க்கப்பட வேண்டும். உள்ளிட்ட 37 பக்கம் ெகாண்ட துணை அறிக்கையில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா தேவர் கூறியுள்ளாா்.
பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் மாநிலச் செயலாளர் வளிக்கண்ணு, வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, பாக்யராஜ், பொன்முத்து பாண்டியன், மற்றும் நிா்வாகிகள் தோமஸ் மாரியப்பன், சங்கிலி, அருண்குமார், கருப்பசாமி, செல்வம், முத்து, கண்ணன், ஆறுமுக செல்வன் உள்பட பலர் உடனிருந்தனா்.