தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர போல்பேட்டை பகுதி இளைஞரணி மற்றும் பத்தாவது வட்ட திமுக சார்பில் திரவியபுரம் இரட்டைப்படை காளியம்மன் கோவில் அருகே காமராஜர் 124வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு போல்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர்கள் கார்த்திக், பாலா, கௌதம், ஆகியோர் தலைமை தாங்கினார். போல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலாளர் சக்கரைச்சாமி வரவேற்றாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா, வாட்டர் கேன், பை, உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். பெண்களுக்கு அரிசி வேஷ்டி சேலை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளர் ஜான்சன் டேவிட், முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் சேகா், கங்காராஜேஷ், கருப்பசாமி, கவுன்சிலா் அந்தோணி பிரகாஷ்மாா்ஷல், மாவட்ட திமுக பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், ராஜ்குமார், போல்பேட்டை பகுதி பொறியாளர் அணி பாலா வட்ட இளைஞர் அணி நாகராஜ், சேவியர், சுதாகர், மாதவன், வேல், வெங்கடேஷ், வசந்த், சங்கர், துரை, மாநகர அஜித் ரசிகர் மன்ற தலைவர் மாணிக்கம், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவனை போல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஆகியோர் மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்