தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.
ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள்சாமி தலைமையில் சிதம்பர நகர் நான்காவது தெருவில் உள்ள பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன் மாநில பேச்சாளர் பார்த்திபன், வக்கீல் பிரிவு பிரதிப் தினகரன், பிரேம்நாத், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!
