தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு சீனிவாச சித்தர் தலைமையில் பால் தயிர் சந்தணம் பன்னீர் மஞ்சள் குங்குமம் உட்பட அபிஷேகம் மற்றும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மகாயாகம் நடைபெற்றது.
பூஜையில் தமிழ்நாடு அரசு நல்ல முறையில் செயல்பட வேண்டியும் மற்றும் உலக அமைதியும் உலக சமாதானம் மற்றும் நல்ல மழை வேண்டி மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி பக்தர்கள் அனைவரும் ஒரு நிமிடம். பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பூஜையில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்