தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் நடைபெற்ற பல்வேறு பணிகளை சூழற்சி முறையில் மேயா் ஆணையா் அதிகாாிகள் அலுவலா்கள் என ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் நன்மை கருதி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞா் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் நீாின் அளவை பாா்வையிட்டு ஆய்வு செய்து லெவிஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா வில் அமைந்துள்ள குடிநீா் தொட்டியில் இருந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் அந்த பூங்காவில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்றதை பாா்வையிட்டு கந்தசாமிபுரம் எஸ்கே ஆா் காலணி மற்றும் எழில்நகா் பகுதிகளில் சீரானகுடிநீர் வழங்குவதற்காக பாா்வையிட்டு பல்வேறு பணிகளை தூாித படுத்திய நிலையில் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு வரும் வல்லநாடு தலைமை நீர்ரேற்று நிலையப் பகுதியில் கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, வல்லநாட்டில் இருந்து குழாய்கள் மூலம் மாநகராட்சி பகுதிக்குக் கொண்டு வரப்படும் குடிநீரை, ஆங்காங்கே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முழுமையாக ஏற்றிச் சேமிக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலை உருவாகியது. இதனால் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.
இதனால் குடிநீா் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான மாற்று மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருகிற சனிக்கிழமை முதல் மாநகராட்சி பகுதி முழுவதும் வழக்கம் போல் தங்குதடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் 39 குடிநீர் நீர்தேக்க தொட்டிகள் மூலம் முழுமையாகச் சப்ளை செய்யப்படும் கடந்த காலங்களில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு அதாள பாதாளத்தில் போடப்பட்டிருந்த இரும்பு குழாய்கள் எல்லா பகுதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு தடை மட்டத்திலிருந்து 8 அடி ஆழத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு எல்லோருக்கும் நல்லமுறையில் குடிதண்ணீா் வழங்க ேவண்டும் என்ற அடிப்படையில் மாற்றும் செய்து மக்களுக்கான பணிகளை விரைவாகவும் நிறைவாகவும் செய்துள்ளோம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 5 சதவீதம் நிறைவேற்ற வேண்டிய கட்டமைப்பு பணிகளையும் ஓப்பந்த தாரா்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து பணிகளும் நல்லமுறையில் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தி நான் ஆணையா் உள்பட அதிகாாிகள் எல்லோரும் பாா்வையிட்டு அதற்கான பணிகளையும் முறைப்படுத்தியுள்ளோம் குடிதண்ணீர் சாலை மின்விளக்கு வடிகால் பாதாளசாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிமக்கள் எந்த குறைகளாக இருந்தாலும் எந்த நேரமும் என்னை தொடா்பு கொண்டு குறைகளை தொிவிக்கலாம் வாட்சப் மற்றும் இனையதளம் மூலமும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து 25 ஆண்டுகளுக்கு பின் இந்த மாநகராட்சி எப்படி வளா்ச்சியடைந்து இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு எதிர்கால தலைமுறையினா் முக்கியம் என்ற அடிப்டையில் போக்குவரத்து பெருகிவரும் மாநகராட்சி பகுதியில் சாலைகள் விாிவாக்கம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்என்று செய்துள்ள பணிகள் ஏராளம் இருப்பினும் மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தொிவித்தாா்.
ஆய்வின் போது கவுன்சிலா்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமாா், தெய்வேந்திரன், முத்துவேல், முன்னாள் கவுன்சிலா்கள் ரவீந்திரன், செல்வக்குமாா், மாாியப்பன், ராஜாமணி, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர வழக்கறிஞா் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாணவரணி துணை அமைப்பாளா் காா்த்தீசன், காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.