தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் கட்டப்பட்டு வருகின்ற புதிய நூலகத்ததை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு அதிகாாிகளிடம் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறந்தபின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை மிஞ்சும் வகையில் மாநகராட்சி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது 11 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது இந்த நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. அது நவீன மின் வசதிகள் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் படிப்பதற்கான அனைத்து புத்தகங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளது. லிப்ட் வசதி உருவாக்கப்படுகிறது. மேலும் நூலகத்தின் முன்புறம் நூலகத்தை சுற்றி பசுமை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய சிறிய வகை விளையாட்டுக்கு ஏற்ப அங்கு வசதி அமைக்கப்படுகிறது. அந்த நூலகத்திற்கு இருபுறமும் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் தனசேகர் நகரில் அமைக்கப்படுகின்ற இந்த நூலகம் தென் மாவட்டத்தில் எங்கும் இல்லாத வகையில் இங்கு அனைத்து வகையான நூல்களும் நூலகத்தில் அமைக்கப்படுகிறது. மேலும் அனைத்து வகையான படிப்புகள் தொடர்பான புத்தகங்கள் வைக்கப்படுகிறது அது போல அரசு பணி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அங்கு அமைக்கப்படுகிறது. மேலும் 4 மாடித்தளத்திலும் ஒவ்வொரு மாடி செல்கின்ற பாதையில் படிப்பவர்கள் தரையில் சொகுசாக அமர்ந்து படிக்கும் வகையிலும் அதற்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்படுகிறது. இதுவரை எங்கும் அமைக்கப்படாத வகையில் அனைத்து வசதிகளும் கழிப்பறைகள். அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் அனைத்து வசதிகளும் இங்கு உருவாக்கப்படுகிறது. பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இன்னும் நான்கு மாதத்தில் இந்த நூலகம் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையுள்ளது பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ள உத்தரவின்படி அனைத்தும் அமைக்கப்படஉள்ளது எந்த மாற்றமும் செய்யக்கூடாது இது முழுக்க முழுக்க மக்களை கவரக்கூடிய வகையில் நூலகம் அமைக்கப்படுகிறது என்று ேமயா் ஜெகன் பொியசாமி கூறினார்.
ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையர் முனீர் அகமது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளார் ராஜேஷ் கண்ணா, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தவைலர் சுரேஷ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமா், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர் ராஜாமணி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் ேஜஸ்பா், பிரபாகா், லிங்கராஜா, உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்்