தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல் மழை வெள்ளத்தில் தான் மக்கள் நீந்தி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது அதுபோல குடிநீர் பிரச்சனை என்பது கோடை காலத்தில் குடிநீர் கிடைப்பது என்பது அரியதாகவே இருந்தது. மாநகராட்சியில் 8 பூங்கா மட்டுமே இருந்தது. ஆனால் மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்ற நாலரை ஆண்டுகளில் 60 பூங்காக்கள் மாநகராட்சியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது 3 மகளிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இடங்கள் 100 கோடிக்கு மேல் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது
குடிநீர் பிரச்சனை என்பது முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டது அவரது கனவுத் திட்டமான 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து ஒரு சில வாரங்களில் கனவுத் திட்டமான மாநகராட்சி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மழைக்காலத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கி வருகிறது அதுவும் ஒரு சில நாட்களில் முற்றிலும் மழை நீர் அப்புறப் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல அடிப்படை வசதிகள் முற்றிலும் மாநகராட்சி பகுதி மக்களுக்கு சரி செய்யப்பட்டுள்ளது.
மேயர் ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மாநகராட்சி பள்ளிகளில் 100 முதல் 200 மாணவ மாணவிகள் தான் படித்து வந்தனர் ஆனால் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ஒவ்வொரு பள்ளியிலும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் மாநகராட்சி பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளார் இதுபோல பல்வேறு அடிப்படை வசதிகள் வளர்ச்சித் திட்டங்கள் மாநகராட்சி பகுதிக்கு செய்துள்ளார் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடியில் தங்கி இருந்து படித்து வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக இரண்டு இடத்தில் மாணவ மாணவிகள் படிப்பதற்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதற்கான படிப்புகள் உள்ளிட்ட புத்தகங்களுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த படிப்பகத்தை திமுக தலைவரும் அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனவுத் திட்ட நாயகனும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் அதுபோல மாநகராட்சி பொதுமக்களும் நோில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமியின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ம் ஆண்டு மாநகராட்சி எப்படி இருந்தது 2026ம் ஆண்டு மாநகராட்சி எப்படி இருக்கிறது என்பது பொதுமக்களின் மனதில் இடம் பிடித்த கனவு திட்ட நாயகனாகவே மேயர் ஜெகன்பொியசாமி வளம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
20வது வாா்டு திமுக சாா்பில் வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மேயா் ஜெகன் பொியசாமிக்கு சால்வைகள் மாலைகள் அணிவித்து வாழ்த்து தொிவித்தனா்.
மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலை தலைவா் மருதப்பெருமாள் பொதுச்செயலாளர் ஜெயராஜ் பொருளாளா் செல்வக்குமரன், காது கேளாளோா் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தலைவர் பேச்சிமுத்து மாவட்ட பிரதிநிதி நாராயணன் தொண்டரணி துணைச்செயலாளர் ராமா் சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் தங்கராஜ், வாா்டு நிர்வாகிகள் அருணகிாி, பொியசாமி இசக்கி பாலமுருகன், வசந்தகுமாா், தங்கராஜ், ஆனந்த் ஜெயபாண்டி ராஜ்குமாா், பாலசுப்பிரமணியன் ராஜேஷ்குமாா், சிவாஜிமன்றம் சுடலைமுத்து, தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் மண்டலத்தலைவர்கள் கவுன்சிலா்கள் பத்திாிகையாளா்கள் உள்பட பலா் வாழ்த்து தொிவித்தனா்.