தூத்துக்குடி நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறக்க சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல்திறக்க சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் அடிப்படை தேவைக்கும் தண்ணீர் என்பது மிக முக்கியமான உரிமை. ராஜ வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, அவர்களின் உண்மையான தேவையையும் வேதனையையும் காட்டுகிறது. தண்ணீர் பிரச்சினை என்பது அரசியல் பார்வையில் பார்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல அது மக்கள் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை பிரச்சினை. விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நிலைமையை ஆய்வு செய்து, சட்டப்படி மற்றும் சமமான முறையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவையான தண்ணீருக்காக அவர்கள் குரல் கொடுக்க வேண்டிய நிலை உருவாகுவது வருத்தமானது. இந்த பிரச்சினைக்கு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மனிதநேயத்துடனும் பொறுப்புடனும் தீர்வு காண வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை