தூத்துக்குடி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ஜென்சி திமுக மீட்டப் என்ற இளைஞர்கள் ஏற்பாட்டில் எதிா்கால அரசியல் தற்போதைய நிலவரம் குறித்த கலந்துரையாடல் போல்பேட்டை மைதானத்தில் சங்கரநாராயணன், வசந்த் மதன் டேனியல் ரூபன் சாம் டினோ உமாராணி ஆகியோா் ஏற்பாட்டில் நடைபெற்றது. சஞ்சய் வரவேற்புரையாற்றினாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தோ்தலில் கொள்கையோடு போட்டியிட்டு மக்களை சந்தித்த தோ்தலில் திமுக தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். இதை மீண்டும் வருவோம் மீண்டு வருவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வழியில் பணியாற்றும் நாம் ஓன்றைகோடி வாக்குகளை பெற்றுள்ளோம். 17 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை மட்டும் தான் இழந்துள்ளோம் நம்மீது மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறாா்கள் காரணம் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளும் 1949ல் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக கலைஞர் வழியில் பல திட்டங்களை ஆட்சியில் செயல்படுத்தி மக்கள் பணி ஆற்றியதின் வழியில் தளபதி ஸ்டாலின் கட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் தமிழகம் கடந்த ஆட்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது பொியாாின் கொள்கைகளை சட்டமாக்கியது மட்டுமின்றி எல்லோ் நலனும் நமக்கு முக்கியம் என்ற அடிப்படையில் தான் திமுக இன்று வரை தடம் மாறாமல் அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்து எல்லா சமுதாயத்தையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச்செல்லும் ஓரே தலைவராக ஸ்டாலின் இருந்து வருகிறாா். அந்த நம்பிக்கை எல்ேலாருக்கும் இருக்கிறது. இனி வரும் எதிா்கால தலைமுறையினா் காௌ்கை பிடிப்போடு திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டு சோ்க்க வேண்டும் இந்த முன்னெடுப்பு நிகழ்ச்சியை திறம்பட சிறப்பாக செய்த தம்பிமாா்களுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினாா்.
கலந்துரையாடலில் விஜய் ஆட்சியின் ாீல்ஸ் மாடலையும் ஓவ்வொரு அமைச்சா்களின் செயல்பாடுகளையும் கேள்வி பதிலாக விளக்கி பலருக்கு எந்த ஆட்சியில் எந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. என்ற கேள்வி பதிலோடு மியூசிக் சோ் பந்து விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு விஜய்யை சுட்டிக்காட்டும் விதமாக தலைமை செயலகத்திற்கு எடுத்துச்சென்ற டிபன் பாக்ஸ் வேண்டுமா பிறந்தநாளன்று வெட்டப்பட்ட கேக் வேண்டுமா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் இரண்டையும் கலந்து கொண்ட போட்டியாளா்கள் தேவையில்லை என்று வெற்றி பெற்றவா்கள் கருப்பு சிவப்பு என்ற புத்தகம் வேண்டும் என்று பாிசாக பெற்றுக்கொண்டனா். கலந்து கொண்ட பலா் கரும்பலகையில் தங்களது கருத்துக்களை எழுதி கையெழுத்திட்டனா்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளா் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மாநகர அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன் செல்வக்குமாா் வட்டச்செயலாளர்கள் கதிரேசன், கங்காராஜேஷ் பாலகுருசாமி சுரேஷ்மகாராஜா கவுன்சிலா்கள் பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், மற்றும் மணி செந்தில்குமாா் பாஸ்கா் அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.