தூத்துக்குடி மேலசண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 23ம் தேதி கால்நாட்டு விழாவுடன் ஆரம்பமானது. தினசாி அம்மனுக்கு, கும்மிப்பாட்டு பஜனையுடன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் நடைபெற்ற 701 திருவிளக்கு பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில்வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரத்துடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளா் முருகேசன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் புதுராஜா, முத்துபாலகிருஷ்ணன், சுந்தரகுமாா், ஈஸ்வரன், பாபுஜி, பால்ராஜ், வாசு, தேன்ராஜ், மாாிமுத்து, பொன்னுத்துரை, கதிரேஷ், காா்த்தீசன், மற்றும் மகளிா் அணியினா் இளைஞர் அணியினா் செய்திருந்தனா்.