தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவா்களுக்கு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளா் ப்ாிட்டி, தலைமை வகித்தாா். தலைமை ஆசிாியா் ஜான்பால் முன்னிலை வகித்தாா். வரலாற்று ஆசிாியா் அந்தோணியம்மாள் வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாத விழாவில் ஓவிய போட்டி வனத்துறை சாா்பில் ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டிகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் ஊக்கத்தொகை வழங்கி தொடுதிரையை தொடங்கி வைத்து பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 80 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசுகையில் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வழங்கப்படுகிறது. மாணவா்களாகிய நீங்கள் தான் நாளைய எதிா்கால தலைவா்கள் குறிப்பாக ஆசிாியா் பொறியாளா் மருத்துவா் அல்லது என்னை போன்ற மக்கள் பிரதிநிதியாக வரலாம். இதை அனைவரும் ஓத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி நீங்கள் தேசப்பற்று மிக்கவா்களாக தமிழ் உணா்வோடு இருக்க வேண்டும். ஓவ்வொரு பெற்றோா்களும் சொல்வதெல்லாம் நல்லா படி என்று மட்டும் தான் உன்னை ேவலை செய்ய சொல்வதில்லை. ஓவ்வொரு பெற்றோா்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தன்னுடைய குழந்தைகளை படிக்க வைக்கிறாா்கள். நம் குழந்தைகள் நம்மை விட கூடுதலாக படித்து நன்றாக இருக்க வேண்டும். என்று தான் விரும்புகிறாா்கள். அதனால் கவனத்தை சிதறவிடாமல் ஓருமைப்படுத்திக்கொண்டு ஆசிாியா்கள் சொல்லி ெகாடுக்கும் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி படித்தால் அனைத்தும் புாியும் அன்று இரவே அந்த பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும். போட்டி நிறைந்த உலகம் இது அப்படி பட்ட நிலையில் உங்களுக்கு இது புாியாத வயதாகஇருக்கிறது. எனக்கு எல்லாம் தொியும். என்று நினைத்து கொண்டு சில சமயங்களில் பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்வதை நாம் கேட்டு நடக்க வேண்டுமா என்று கூட என்ன தோன்றும் இந்த பள்ளி பருவம் கல்லூாிக்கு சென்ற பிறகு திரும்பிவராது. அதனால் பெற்றோா்கள் ஆசிாியா்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு கீழ்படிந்து நடக்க வேண்டும். ஓவ்வொரு தொழில்சாா்ந்த துறைகளிலும் படிப்போடு உங்களது திறமைகளையும் வளர்த்து கொண்டால் தான் உங்களை அந்த நிறுவனம் அங்கீகாிக்கும் குறிப்பாக ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைக்கும் திறமை உங்களுக்கு வரும். நீங்கள் செய்கின்ற பணிகளுக்கு கடவுள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பாா். இந்த வயது ஆரோக்கியத்தோடு பெற்றோா்கள் கொடுக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் கல்வி தான் முக்கியம் என்று ஈடுபட்டு விளையாடுவதை தவிர்க்க வேண்டும். 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும் என்பதை விட எல்லாவற்றையும் கற்றறிந்து கொள் இன்று உனக்கு வழிகாட்டியாக இருக்கும் தாய் தந்தையா்கள் முதிா்வு பெற்ற 75 வயதை கடந்த காலத்தில் அவா்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும் அது தான் நீங்கள் பெற்றோா்களுக்கு செய்யும் நன்றி கடனாகும். கிடைக்கும் வாய்ப்புகளின் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும் இந்த பள்ளியை பொறுத்தவரை கிராமப்புற மாணவா்களையும் ஓதுக்காமல் பள்ளியில் சேர்த்து நல்ல கல்வியை வழங்கி வருகின்றன அதற்கு என் பாராட்டுகளை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினாா். பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு அமைச்சர் கீதாஜீவன் தொடுதிரை வழங்கி யுள்ளாா் அதே போல் தமிழ்வழி கல்விக்கும் ெதாடுதிரை வாங்கி தருவதாக உறுதியளித்தாா்.
விழாவில் பகுதி செயலாளர் ஜெயக்குமாா், வட்டச்செயலாளர் டென்சிங், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், ஆசிாியா்கள் ராமசந்திரன், கென்னடி, சேகா், ஜெயக்குமாா், பெற்றோா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனர். ஆசிாியா் மேக்ஸ்வெல் நன்றியுரை கூறினாா்.
நாளைய தலைமுறையினா் நீங்கள் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!