Dinapuratchi

725 Articles

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் தொழில் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டா் விஷு மகாஜன் கள ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அலகு I & II, அணுகுச்சாலை, அல்லிக்குளம், தெற்கு வீரபாண்டியபுரம், வடக்கு சிலுக்கான்பட்டி, ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய பகுதியில்…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பிரதான சாலையில் உள்ள இந்திரா நகரில் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இருசக்கர…

தூத்துக்குடி: தூய இம்மானுவேல் ஆலயம் முன்பு சபை மக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 5: தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் சேகரம், தூய இம்மானுவேல் ஆலயத்தில் சபை மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்…

மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கைலாஷ் மஹாலில் மாநகர மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக…

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வரவேற்கத்தக்கது – பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிக்கை

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள்…

மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மெஞ்ஞானபுரம் தனியாா் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர்…

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய கிணறு ஒன்றினை அமைத்து மேலும்…

கருங்குளம் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளி, காசிலிங்கபுரத்தில் காலை வழிபாட்டின் போது போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ சந்தனமாரியம்மன்…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு கனவுத்திட்டமான 24 மணி நேர குடிதண்ணீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல்…

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? குடும்ப ஆதிக்கம், சர்ச்சைகள், தொடர் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள்!

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல்…

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கும் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு தவெக தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு அமைச்சரவையை பொருத்தவரை முதல்வருடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போது தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. விஜய் முதல்வராக இருக்கும் நிலையில் 34 பேர் அமைச்சர்களாகி விட்டனர். இதனால் புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றால் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரை நீக்கம் செய்ய வேண்டும் என்ற நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள் மீதான தீவிர கண்காணிப்பை உளவுத்துறை தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தனது அமைச்சரவையை மாற்றம் செய்வது பற்றிய யோசனையில் இறங்கி உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இணைந்த நிலையில் அவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் புதிதாக அமைந்த தவெக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைகள் சூழ்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த விஷயம் பற்றி முதல்வா் விஜய் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தொடர் சர்ச்சைகள், புகார்களில் சிக்கியுள்ள பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பெயராக தாம்பரம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏவான சரத்குமாரின் பெயர் உள்ளது. இவர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பார்த்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தவெக அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதல் ஆளாக சரத்குமார் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் சமூகநலம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இந்த பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது சர்ச்சையை கிளப்பியது. அதேபோல் விருதுநகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேடை பேனரில் கீர்த்தனாவின் பெயர் முதலில் இடம்பெற்றிருப்பதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இதில் தவெக தலைமை அதிருப்தியாகி உள்ளது. அமைச்சர்கள் சரத்குமார் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரங்களையும் அவர்கள் கையாண்ட விதத்தால் கட்சி மேலிடம் அதிருப்தியாகி உள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி, திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள் மாவட்டத்திலுள்ளவர்களுக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவும் இத்தகைய மாற்றத்தின் போது தொடர்ச்சியான கட்சி நிர்வாகிகளிடையேயான மோதல் போக்கு, குடும்ப உறவினர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு குறு, நடுத்தர தொழிலக அமைச்சருமான மதன்ராஜாவும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் எனவும் இதேபோல் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். அதன்படி விராலிமலை தொகுதியின் மாஜி எம்எல்ஏ சி விஜயபாஸ்கர், கரூர் மாஜி எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர், அம்பை முன்னாள் எம்எல்ஏ இசக்கிசுப்பையா உள்ளிட்டவர்களில் இடைத்தேர்தலில் வென்று வரும் பட்சத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் பொருட்டு கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்திட கூடுதலாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியலுடன் இத்தகைய மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றன. மேலும் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் தவெகவின் சேலம் தெற்கு தொகுதியின் எம்எல்ஏ விஜய் தமிழன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏஎம் ஷாஜகான் ஆகியோரின் அமைச்சர்கள் பதவிகளும் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக உள்ளார். திண்டிவனம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் வன்னியரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ளார். தங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வழங்க வேண்டும் விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் துறைகளில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவகாரம் தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது எனவும், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அமைச்சரவையை மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகின்றன. ஊழலற்ற நிர்வாகம், சமூகநீதி பார்வை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கவனத்தில் கொள்ளும் தமிழ்நாடு முதல்வர் விஜயின் இத்தகைய அமைச்சரவை மாற்றம் என்பது மக்களின் செயல்திட்டங்கள், கட்சி நிர்வாக சீரமைப்பு, ஊழல், குடும்ப ஆதிக்கம், பாகுபாடு சர்ச்சைகளை நீக்கி இனிவரும் காலங்களில் சீரான நிர்வாக செயல்பாடுகளையும், வெளிப்பாடான ஆட்சியை வெளிக்கொண்டு வர உதவும் என்கிற பாணியில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என அரசியல்ரீதியான விமர்சனங்கள் வெளிவருகின்றன.

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல்…

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? குடும்ப ஆதிக்கம், சர்ச்சைகள், தொடர் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள்!

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல்…

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய அலுவலராக பெ.சா.…