கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளி, காசிலிங்கபுரத்தில் காலை வழிபாட்டின் போது போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர் மற்றும் சமூக நல விழிப்புணர்வு பிரச்சார அறப்பணி பயிற்றுநர் அதிசயமணி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். மேலும் மாணவர்களை உறுதிமொழியும் எடுக்க செய்தார்கள்.
விழாவில் மணியாச்சி உட்கோட்ட தலைமைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் முத்து கணேஷ், சிங்கத்தாங்குறிச்சி ஆரம்பதுறை செவிலியர் சொர்ணத்தம்மாள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.