தூத்துக்குடி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிரையண்ட் நகர் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்
தூத்துக்குடியில் இருக்கக்கூடிய உப்பளத்தை அரசு கையகப்படுத்தி அங்கே கப்பல் கட்டும் தளம் அமைக்கிற முயற்சி நடந்து கொண்டிருப்பதால் அதனை கண்டித்தும் கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் அதுமட்டுமில்லாமல் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் மருதமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை பனை விவசாயி மணிகண்டன் கள் இறக்கியதாக கூறி அவரை துப்பாக்கியால் காலில் நாலு ரவுண்டு சுட்டதில் மணிகண்டன் நடக்க முடியாத நிலையில் வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே எஸ்ஐ இசக்கி ராஜாவை நிரந்தர பணி நீக்க கோரியும் அவருடைய மனைவி பொன் மணிக்கு தமிழக அரசு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றும் மணிகண்டன் தொழில் செய்ய முடியாத காரணத்தினால் அவருக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்று கூறினாா்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மத்திய மாவட்ட தலைவர் பொன்ரத்தினம், மாவட்ட செயலாளர் மரிய அந்தோணி வளன், மாவட்ட துணை தலைவர் காமராஜ், மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்