தூத்துக்குடி வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ‘போடேகோஷி’ எல்லை நதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கால் நேபாளம் உருக்குலைந்துள்ளது. இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது. மேலும் 650க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று நேபாள அரசு அறிவித்துள்ளது
வடக்கு நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் 200-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த 178 பேரை காணவில்லை என்றும் நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியையும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி புனித லசால் பள்ளி சார்பாக தலைமையாசிரியர் அருட்சகோதரர் இராபர்ட் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்