தூத்துக்குடி தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் ஊழல் இல்லாத லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு நிகழ்வுகள் தமிழக முதலமைச்சர் விஜய் நிர்வாகம் செய்யும் நகராட்சி நிர்வாக துறையிலேயே பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் பணி வேலை செய்து வருகின்றனர் ஆனால் சில ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் எந்த ஆட்சி அமைகிறதோ அந்த ஆட்சியை சார்ந்த பணிகளை செய்து வருவார்கள் சில ஒப்பந்ததாரர்கள் இந்த கட்சி எங்க கட்சி என்று கூறி அதிகாரிகளை மிரட்டி பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் வேலை செய்துவரும் நியூட்டன். டினோ ஆகிய இரு ஒப்பந்ததாரர்களும் அமைச்சர் ஸ்ரீநாத் பெயரைச் சொல்லி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை மிரட்டுகின்றனர் இது வெளிப்படையாகவே நடந்து வருகிறது. மேலும் பணிகளை செய்யும் போது பழுதான பொருட்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்பந்ததாரர் ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஒப்பந்ததாரர்கள் தற்போது பல்வேறு பொருட்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது கிடையாது இந்த ஒரு குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அதுபோல மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருக்கும் சிபி. தினேஷ் ஆகிய இரவு ஒப்பந்ததாரர்களும் அமைச்சர் மதன் ராஜா பெயரை கூறி மாநகராட்சியில் அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். இந்த 4 ஒப்பந்ததாரர்களும் மாநகராட்சியில் பல வருடங்களாக பணிகளை செய்தாலும் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த உடன் அமைச்சர் ஸ்ரீநாத். அமைச்சர் மதன்ராஜா ஆகிய இரு அமைச்சர்களின் பெயரை கூறி இந்த4 ஒப்பந்ததாரர்களும் மாநகராட்சி அதிகாரிகள் அனைவரையும் மிரட்டி வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சி பணிகள் தொடர்பான கோப்புகள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தான் கொண்டு செல்ல வேண்டும் ஆனால் இந்த ஒப்பந்ததாரர்கள் அவர்கள் பணி செய்த கோப்புகளை அதிகாரிகளிடம் நேரடியாகவே கொண்டு சென்று கையெழுத்து வாங்கி வருகிறார்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் சில பணிகள் முடிவதற்கு முன்பே மாநகராட்சியில் பணிகள் தொடர்பாக எழுதப்படுகின்ற எம் புக்கில் பணிகள் முடிவடைந்ததாக எழுதப்பட்டு அதற்கான தொகையும் மாநகராட்சியில் இருந்து கொடுக்கப்படுகிறது தமிழக முதலமைச்சர் விஜய் நிர்வாகம் செய்கின்ற நகராட்சி நிர்வாக துறையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 ஒப்பந்ததாரர்கள் இரண்டு அமைச்சர்கள் பெயரை கூறி அதிகாரிகளை மிரட்டி தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து வருகின்றனர் ஆகையால் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர் அதுபோல அமைச்சர்கள் ஸ்ரீநாத். மதன் ராஜா ஆகிய இரு அமைச்சர்களும் உடனடியாக இந்த நான்கு ஒப்பந்ததாரர்களையும் கண்டிக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது பெயரைச் சொல்லி எந்த ஒப்பந்ததாரருக்கும் எந்த அனுமதியும் முறைகேடான முறையில் செய்ய வேண்டாம் என்று கூற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனா் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா இரண்டு அமைச்சர்களும் முற்றுப்புள்ளி வைப்பார்களா மாநகராட்சி பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த நான்கு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பெயரை கூறி மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..