தூத்துக்குடி மாநகரை அழகு படுத்த வேண்டும் பொதுமக்கள் எந்த விதமான இடையூறு இன்றி சாலைகளில் செல்வதற்காகவும் வாகனங்களை நிறுத்துவதற்காகவும் மாநகர் பகுதி முழுவதும் சாலைகளில் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்படுகிறது இது நகரை அழகுப்படுத்தும் வகையிலும் குப்பைகள் தேங்காமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டு வருகிறது இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு நல்ல முறையில் உள்ளது. ஆனால் மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்து பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை செய்து வரும் ஒப்பந்தக்காரர்கள் மாநகராட்சி கொடுத்துள்ள விதிகளை மீறிதான் பணிகளை செய்கிறார்கள். தூத்துக்குடி மாநகரில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கல் தரமானதாக இல்லை என்பது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு கல் சரியான முறையில் பதிக்கப்படவில்லை ஒருபுறம் மேடாகவும் ஒரு புறம் பள்ளமாகவும் பதிக்கப்பட்டுள்ளது. அதுபோல பேவர் பிளாக் கல் பதிக்கும் இடங்களில் சாலைகளில் இருபுறமும் மரங்கள் உள்ளது அந்த மரங்களை சுற்றி சேம்பர் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்க்கும் வகையில் நன்றாக அமைக்க வேண்டும் ஆனால் எந்த ஒரு மாநகர் பகுதியில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மரங்கள் திஷ்டி பொம்மை வைத்தது போல அப்படியே மரத்தை சுற்றி மிகவும் கேவலமான மோசமாக பார்ப்பவர்களின் பார்வை மாநகராட்சி மீது தவறான ஒரு எண்ணத்தை உருவாக்கும் வகையில் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்துள்ளனர் ஆனால் இதனை கண்காணிக்க மாநகராட்சியில் அதிகாரிகளோ அதிகாரிகள் உள்ளன ஆனால் எந்த ஒரு அதிகாரியும் இதனை வந்து நேரில் பார்வையிட்டு இப்படி செய்ய வேண்டும் என்று கூறியது கிடையாது உயர் அதிகாரி ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பணிகள் நடைபெற்றதாக பதிவேடு செய்யப்படும் எம் புக்கில் கையெழுத்து போட்டு விடுகின்றனர் இதுதான் மாநகராட்சியில் நடைபெறும் பணியில் அனைத்துக்கும் 100 சதவீதம் பொறுப்பு அதிகாரிகள் தான். பலமுறை மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பணிகள் இப்படி செய்ய வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்கள் உத்தரவிட்டோம் அருகில் இருக்கும் அதிகாரி சரி பார்த்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்களே தவிர அதன் பின்பு அந்தப் பணிகளை ஒப்பந்தக்காரரும் செய்வது கிடையாது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளும் சொல்லுவது கிடையாது இதுதான் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து மாநகராட்சி அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகர் பகுதி முழுவதும் ரோட்டில் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்படுகிறது . மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய வேலை செய்வதற்கான ஆணையில் உள்ளது போல எந்த ஒப்பந்ததாரரும் பணிகளை செய்யவில்லை ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் பேவர் பிளாக் கல் பதித்த ஒப்பந்ததாரர் யாருக்கும் மாநகராட்சியில் இருந்து பண மழங்கக்கூடாது உடனடியாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது வழக்கம்போல நடைமுறைதானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.. கடமைக்கு பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர். கண்டுகொள்ளாத அதிகாரிகள்.