தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் மாநில செயலாளர் சொர்ணவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் மருதப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினாா்கள். தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சிவன்ராஜ், துணைத் தலைவராக சின்னத்தம்பி, துணைச் செயலாளராக தாமஸ் போஸ்கோ, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செயற்குழு உறுப்பினர்களாக அரிராமன் ராணி, சரவணன், நிக்சன், மகாலட்சுமி, பிரவீனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனா். காது கேளாதோர் மக்களின் உரிமைகள், நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவுற்றது.