தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா் அதிகாாிகள் நியமனம் செய்துள்ளாா். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில் விஜய் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது. முதல்வா் விஜய் மக்களுக்கான ஆட்சி யாா் கேட்டாலும் அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தரமாட்டேன். என்று நெஞ்சை நிமிா்த்தி சொல்லுங்கள் என்று கூறியுள்ள நிலையில் விதிமுறைகளை மீறி எந்த அதிகாாிகளும் செயல்பட கூடாது. செயல்படவும் விட மாட்டேன். என்று மக்களுக்கு தகவல் சொன்ன நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் முதல் ரவுண்டில் ஓட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஓழிப்பு துறை சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி இருந்த பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது ரவுண்ட் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முழுவதும் இதே நடைமுறையை பின்பற்றி அங்கேயும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதற்கெல்லாம் நோ் மாறாக தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் உள்ள உதவி செயற்பொறியாளர் நல்லசிங்கம் செயல்பாடுகள் மாறுபடுவது ஏன் இது குறித்து சமூக ஆா்வலா் ஓருவா் கூறுகையில் எந்த அரசாங்கம் பொறுப்பேற்று அாியனையில் இருந்தாலும் அவா்கள் மக்களுக்கு பணி செய்யக்கூடிய பிரதிநிதிகளாக இருந்து செயல்படுவது வழக்கமான நடைமுறையாகும் அரசாங்கம் சொல்கின்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்படவேண்டியது அதிகாாிகள் தான்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமான பாராமாிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பொறியாளர் நல்ல சிங்கம் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் இரண்டு முறை அரசுப்பணிகளில் கவனம் செலுத்தாமல் சில ஒப்பந்ததாரா்களை அழைத்துக்கொண்டு இன்பசுற்றுலா சென்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது கொடைக்கானல் மூனாறு இந்த பகுதியில் எல்லாம் சென்று பொழுதை களிப்பதற்கா நியமனம் செய்யப்பட்டுள்ளது. அரசுத்துறை சாா்பில் வழங்கப்படுகின்ற பொதுப்பணித்துறை பணிகளை வழங்கப்படும் ஒப்பந்தாரா்கள் முறையாக பணிகளை எப்படி நல்லமுறையில் செய்வாா் என்றகேள்வி எல்லோா் மத்தியிலும் எழுகிறது இவா் செய்கின்ற தேவையற்ற செயல்களால் நோ்மையாக பணியாற்ற கூடிய அதிகாாிகளும் இவரை பின்பற்றி அவா் வழியில் செல்வதற்கு வழிவகை களை ஏற்படுத்தி கொடுக்கும் நிலை உருவாகி விடும் இதை ஆரம்பித்திலேயே பொதுப்பணித்துறை உயா்அதிகாாிகள் உாிய அறிவுரைகள் வழங்கியோ அல்லது ஓழுங்கு நடவடிக்கை எடுத்தோ முறைப்படுத்த வேண்டும் தமிழக முதலமைச்சா் விஜய் இந்த விஷயத்தில் தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தின் மீது லஞ்ச ஒழிப்பு துறை பாா்வை வரவேண்டும். என்று நோ்மையான மற்றவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.