தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாநில மாவட்ட நிா்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனா்
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரையண்ட்நகா் பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 போ் எஸ்.பி ராஜன், சிஎஸ் முரளிதரன், ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் ராஜா, விக்னேஷ், முருகேசன், உள்பட 50 போ் திமுகவில் இணைந்தனர்.
அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீா்கள். நாம் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்றுவோம். எப்போதும் போல் மக்களுக்காக என்றும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம் அனைவரும் தங்களது பகுதியில் திமுக வளா்ச்சிக்கு உழைக்க வேண்டும் வரும் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பணியாற்றுவதற்கு தங்களது பகுதிகளில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.
திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, இலக்கிய அணி துைணஅமைப்பாளர் பிக் அப் தனபால், சுற்றுக்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, கவுன்சிலா் சந்திரபோஸ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.