தூத்துக்குடி அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு), முன்னாள் அமைச்சருமாமன எஸ்.பி.சண்கமுநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற்று தர முயற்சி செய்யாத தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் நாளை 14.08.2026 காலை 09.30 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்.ஜி.ஆர் திடலில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சிங்காரம் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் சிறப்பிக்கின்றனர். இதில் தலைமை நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி, வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.