தூத்துக்குடி ஜூன் 30
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக
பானோத் ம்ருகேந்தர்
லால் பொறுப்பேற்றார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது ஆணையர் தெரிவித்ததாவது
தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து செயல்படுவேன்.
மாநகராட்சி பகுதியில் நடைபெற வேண்டிய அடிப்படை பணிகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்த இடத்திற்கு பதிலாக பானோத் ம்ருகேந்தர் லால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 14வது புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஆணையருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.