தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வரும் மெயின் பைப் லைன் உடைப்பு மற்றும் நான்காவது குடிநீர் பைப் லைன் வாழ்வு உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 6ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பணி எல்லாம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரின் அளவு சாியான மழை இல்லாத காரணத்தால் கடுமையாக குறைந்து உள்ளது. தொடர்ந்து மாநகராட்சி பகுதி மக்களுக்கு எந்த விதமான தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஞாயிற்றுக்கிழமை மேயர் ஜெகன் பொியசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்பு வல்லநாடு கலியாவூர் பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு நீர் வரத்து எவ்வளவு வருகிறது. என்ற விபரங்களை அங்குள்ள பணியாளா்களிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு ஆற்றுப்படுகையில் நீர்வரத்தை அதிகப்படுத்துவதற்காக ஹிட்டாச்சி மூலம் வல்லநாடு ஆற்றுப்படுகையில் தோண்டப்பட்டு அதன் மூலம் நீர் எடுக்கப்பட்டு பம்பிங் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது இதனால் கூடுதலாக தண்ணீர் வரும் என்று தெரியவருகிறது. வல்லநாடு ஆற்றுப்படுகையில் ஹிட்டாச்சி மூலம் தோண்டும் பணியை திடீரென்று மேயர் ஜெகன் பொியசாமி வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கினார் அருகில் இருந்து அதிகாரிகள் உடனடியாக பதறினார்கள் அதன் பிறகு அதிகாரிகளும் ஆற்றுக்குள் இறங்கினார்கள் அப்போது மேயர் ஜெகன் பொியசாமி ஆற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று அங்கு இருந்த ஒரு கம்பை எடுத்து ஆழம் பார்த்தார் இந்த தண்ணீா் போதுமானதாக இல்லை மழைக்காலம் வரும் வரை இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை ஆகையால் மேலும் ஹிட்டாச்சி மூலம் மேலும் கூடுதலாக தோண்டப்பட வேண்டும் அப்போது தான் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் அதன் மூலம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட முடியும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து ஹிட்டாச்சி மூலம் ஆற்றுப்படுகையில் தொடர்ந்து தோண்டப்பட்டு வருகிறது. மீண்டும் பம்பிங் ஸ்டேஷனுக்கு மேயா் வந்து அங்கு தண்ணீரின் அளவு கூடுதலாக வருகிறதா என்று அங்கு பொருத்தப்பட்டுள்ள மீட்டரின் அளவை பார்வையிட்டார்.
பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சிபகுதி மக்களுக்கு எந்தவிதமான தடையின்றி தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் மெயின் பைப் லைன் மற்றும் மெயின் வாழ்வு உடைப்பு ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் மாநகராட்சி பகுதிக்கு விநியோகம் செய்யப்படவில்லை பணிகள் எல்லாம் முடிந்து விட்டது தற்போது வல்ல நாட்டிலிருந்து மாநகராட்சி பகுதிக்கு 50 சதவீதம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலைக்குள் நூறு சதவீதம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வந்துவிடும் திங்கட்கிழமை மாலை முதல் மாநகராட்சி முழுவதும் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் அதுவரை பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீர் அளவை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆற்றுப்படுகையில் குறைவான நீர் அளவு உள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு மட்டும் சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும் விரையம் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு மோட்டார் இயக்கும் போது வல்லநாடு ஆற்றுப்படுகையில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் பம்பிங் மோட்டார் சரியான முறையில் இயக்கப்படவில்லை 32 எம்எல்டி தண்ணீர் தான் ஆற்றுப்படுகையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது தற்போது ஹிட்டாச்சி மூலம் ஆற்று படுகையில் தொடர்ந்து தோண்டப்பட்டு வருவதால் தற்போது 55 எம் எல் டி தண்ணீர் பம்பிங் நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. திங்கள்கிழமை மாலைக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேவையான கொள்ளளவான 82 எம்எல்டி தண்ணீர் வந்துவிடும் அதன் பிறகு மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான குடிநீர் விநியோகமும் தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும் என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
உதவி செயற்பொறியாளா் லெனின், இளநிலை பொறியாளா் செல்வம், குழாய் ஆய்வாளா்கள் பாலு, குமாா், மாநகராட்சி பணிக்குழு தலைவா் சுரேஷ்குமாா், கவுன்சிலா் கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
பாக்ஸ்: மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு சென்று குடிநீா் வரும் அளவை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு எந்தெந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பம்பிங் ஸ்டேஷனில் ஆற்று படுகைக்குள் தண்ணீர் எப்படி வருகிறது என்று திடீரென்று பம்பிங் ஸ்டேஷன் மேல்பகுதியில் இருந்து அடிப்பகுதிக்கு செல்லும் பாதை வழியில் உள்ள ஏணி வழியாக திடீரென்று இறங்கி ஆற்று படுகை கீழ் பகுதியில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.