தூத்துக்குடி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறி, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 20-ம் தேதி மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, அவரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மார்க்கண்டேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் 4-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும், சட்டப்பேரவை நடைபெறும் நாட்களைத் தவிர்த்து தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்தது. அதன்படி, மார்க்கண்டேயன் நேற்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டார். தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் திமுக, பாஜக, அதிமுக கூட்டணி ஒன்று சேர்கிறதா என்ற கேள்வி? தேர்தல் நிலைப்பாடு என்பது, தலைவர் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார். தலைவர் மிகச் சரியான முடிவை எடுப்பார். காவிரி என்பது தமிழ்நாட்டில் முக்கியமான நீர் ஆதாரம். காவிரியில் ஏழு லட்சம் ஹேக்டர் ஒட்டுமொத்தமாக காய்ந்து பாலைவனமாக இருக்கிறது. குடிநீர் பிரச்சினையை தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு நீதிமன்றம் சென்று மிக சரியான விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கொடுத்து வேளாண்மையை காப்பதோடு, விவசாயிகளை காப்பதோடு மக்களின் குடிநீர் பிரச்சனையை காக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஸ்டாலினில் ஆலோசனைகளை கேட்க வேண்டும். ஆன்லைனில் மது விற்பனை தொடர்பாக கேட்ட கேள்விக்கு? 750 மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்ன தவெக அரசாங்கம், நாய் விற்ற காசு குறைக்கவா செய்யும் என்று சொல்லும் போது மதுவை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னவர்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 5000 கோடி ரூபாய் மதுவினால் கூடுதல் வருமானம் வரும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.. மதுவினால் 5000 கோடி கூடுதலாக வருகிறது என்றால் போதையை ஒழிப்பதற்காக தவெக அரசு வர வேண்டும் என்று சொன்னார்கள்… இளைஞர்களை போதையில் இருந்து மீட்போம் என்று சொன்னார்களோ மதுவை இளைஞர்களின் பாதைக்கு கொண்டு செல்வதாக இருக்கிறது. அரசு இளைஞர்களையும், விவசாயிகளையும் வருங்கால சந்ததிகளையும் காக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வருமானத்தை உருவாக்க பல்வேறு வழிகள் இருக்கிறது.. இத்தனை வழிகள் இருந்தும் மதுவை மட்டும் திறந்து விட்டு 5000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் ஈட்டுவோம் என்று சொல்வது எங்களுக்கு மிகப்பெரிய ஒரு வேதனையை தருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள்.. இந்த கட்சித் தலைவர் நன்றாக செயல்படுகிறார் என்று தான் வாக்கு கேட்கின்றோம்.. ஆனால் வாக்கு வாங்கிய ஒரு மாதத்தில் அடுத்த கட்சிக்கு தாவுகிறார்கள் என்றால் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதிகளை யார் விலைக்கு வாங்குகிறார்கள்.. ஏதோ ஒரு விஷயம் நடக்கிறது. பணம் கொடுப்பதும் ஒன்றுதான் பதவி கொடுப்பதும் ஒன்றுதான்.. ஏதோ ஒரு வழியில் ஏதாவது கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அது கையூட்டு பெறுவதாக தான் கருத முடியும். இதனை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. என்று கூறினாா்.