தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் இல்லத்தில் வைத்து தமிழகத்தில் இனியொரு ஆணவ படுகொலை நடந்திடாமல் இருக்கவும் தனிசிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கவின் செல்வகணேஷ் அவர்களின் படுகொலையை கண்டித்து நீதி கேட்டும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் பல்வேறு அமைப்பு தலைவர்களும் பல்வேறு இயக்கத் தோழர்களும் சமுதாய பெரியோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் இளம் புரட்சியாளரின் ஆணைக்கேற்ப தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் மாரி செல்வம் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசுகையில் தமிழக அரசு ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் குடும்பத்தாருக்கு சட்டரீதியாக நீதி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும் நீதிக்கான குரல் வேண்டும் என்று பேசினாா்