தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனதலைவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கைகளைக் கண்டித்து, 28.07.2026 அன்று தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
மருத்துவக் கல்வி என்பது பொருளாதார வசதி படைத்தவர்கள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிற்சி பெறக்கூடியவர்களுக்கு மட்டுமானதாக மாறிவிடக்கூடாது. அரசுப் பள்ளிகள், கிராமப்புறங்கள் மற்றும் ஏழை–எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியில் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழக மாணவர்கள் பெரும் மனஅழுத்தம், பொருளாதாரச் சுமை மற்றும் கல்வி வாய்ப்பு மறுப்பு போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்தே கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ேதர்வு முறைகேடுகள் குறித்த புகார்களை முழுமையாகவும் சுதந்திரமாகவும் விசாரிக்க வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் பிற நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடி போராடும் உரிமையை மாணவர்கள் பயன்படுத்தும் போது, அவர்களை காவல்துறையினர் அச்சுறுத்துவதோ, தாக்குவதோ, வலுக்கட்டாயமாகக் கைது செய்வதோ ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் மேற்கொள்ளக்கூடாது.
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பான அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது காவல்துறை அடக்குமுறை மேற்கொள்ளக்கூடாது. ஏற்கெனவே போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நிவாரணமும் நியாயமான கல்வி வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளாா்