தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்படி அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு அண்ணா தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளா் பெருமாள்சாமி தலைமையில், தெற்கு வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள் ராஜா, ராஜேந்திரன், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன் ஆகியோர் முன்னிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மஹாலில் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் தமிழரசன், மாநில தலைவர் பொன் தனபாலன், மாநில பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினாா்கள்.
நிகழ்்ச்சியில் எஸ்.பி சண்முகநாதன் பேசுகையில் தூத்துக்குடியில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் தமிழக முழுவதும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னால் இருந்த அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தவெகவில் இணைந்துள்ளார் அவரை நம்பி அண்ணா தொழிற்சங்க பேரவை சேர்ந்த யாரும் செல்லவில்லை. தூத்துக்குடிதெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு சிலரைத் தவிர 95 சதவீதம் பேர் இன்றும் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இணைப்பு தொழிற்சங்கங்களின் பயணித்து வருகின்றனர் யாரும் செல்லவில்லை கட்டுக்கோப்பாக உள்ளது. வடக்கு மாவட்டத்தில் கடம்பூர் ராஜு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு தவெக வில் சேர்ந்துள்ள நிலையில் அவருடன் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் , தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் பதவிக்காக சென்ற ஒரு சிலரை தவிர, உண்மையான அதிமுக தொண்டர்கள் இன்றும் கழகத்திற்கு விசுவாசமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவின் உண்மையான அதிமுக தொண்டர்களின் மணநிலை என்னவென்றால் உள்ளுக்குள் இருந்து கொண்டு கட்சியை பிளவுபடுத்துவதற்கு பதிலாக அவர்களாகவே கட்சியை விட்டு வெளியேறிவிட மாட்டார்களா? என மன வேதனையில் உள்ளனர். ஆனால் அம்மாவின் மறைவிற்குப் பிறகு இந்த கட்சியை இன்றுவரை கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் ஒரே தலைவர் எடப்பாடி கே .பழனிச்சாமி ஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் நிறைவேற்றி, கட்சியையும் காப்பாற்றி, நீதிமன்றத்தில் நடைபெற்ற அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கான நல்லாட்சியை நடத்தினார். இன்று எடப்பாடி கே பழனிச்சாமி தான் தேவை இவரை தவிர மற்றவர்களை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இன்றும் கட்சிக்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கட்சிக்கு எதிராக சில பல வேலை செய்து வருகின்றனர். அதனையும் எதிர்த்து தான் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கட்சியை இன்று வரை பாதுகாத்து வருகிறார். அன்றும், இன்றும், என்றும் வலுவாக உள்ள ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான், அதுதான் தொண்டர்களுக்கான கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரிய தோல்வியை ஒன்றும் சந்திக்கவில்லை அவா் செல்லாத தொகுதி கிடையாது,
கடந்த கால திமுக ஆட்சியில் மீது உள்ள வெறுப்பின் காரணமாக மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருந்தனர், ஆனால் தெரிந்தோ தெரியாமலோ மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு இன்று மக்கள் ஏன் வாக்களித்தோம் என்ற யோசனையில் உள்ளனர். விஜய் என்று 234 தொகுதிகளில் 108 தொகுதிகள் மட்டும் தான் வென்றுள்ளார். ஆனால் அவர் 234 பகுதிகளையும் வென்றது போல் பேசி வருகிறார். ஒரு சில மாவட்டங்களில் தவெக ஓர் தொகுதி கூட வெற்றி பெறவில்லை என்றும் அதிமுகவிற்கு அழிவே கிடையாது. இன்று நமது கட்சியில் இருந்து தவெகாவிற்கு சென்றவர்கள் அனைவரும் பதவியை பெற்று விடலாம் என்ற நோக்கத்தை சென்றுள்ளனர் ஆனால் அங்கு ஒன்றும் நடைபெறாது. அரசு வழக்கறிஞர் ஆகிய விடலாம் என சிலர் நம்பி அங்கு சென்றனர் ஆனால் அரசு வழக்கறிஞர் பணம் பெற்றுக் கொண்டுதான் போடப்பட்டது, நம்பி போனவர்கள் அனைவரும் இன்று தெருவில் நிற்கின்றனர், தெருவில் நிற்பவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர விரும்புகின்றனர், ஆனால் மீண்டும் அவர்கள் அதிமுகவிற்கு வந்தால் முதலில் இருந்து தான் கட்சி பணியை துவங்க வேண்டும் என பொதுச் செயலாளர் முடிவு எடுத்துள்ளார், வெற்றியோ, தோல்வியோ என்றும் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் உண்டு அதற்கு நானே ஒரு உதாரணம், தோல்வியை கண்டு துவழ வேண்டாம், நாம் மீண்டும் கடுமையாக உழைத்தால் எப்போது தேர்தல் வந்தாலும் இடை தேர்தலாக இருந்தாலும் சரி எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் வரும் காலம் நமக்கானது மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் முழுமனதாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன், தெற்கு மாவட்ட பொருளாளர் சேவியர், தெய்வேந்திரன், வெம்பூரார், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஆரோன், போக்குவரத்து பிரிவு மண்டல துணைத் தலைவர் பார்வதி, இணைச் செயலாளர்கள் லெட்சுமணன், நீதி பாலமுருகன், மாவட்ட தொழிற்சங்க இணைச் செயலாளர் ஜவஹர், மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் ஆறுமுகம், அர்சுணன், மாவட்ட மின்சார பிரிவு செயலாளர் அய்யா சாமி, திட்ட பொருளாளர் ரவிக்குமார், பிற சார்பு அணி நிர்வாகிகள் எம்.பெருமாள், விஜயகுமார், விக்னேஷ், நடராஜன், கவியரசன், அருண்ஜெபக்குமார், ஜாக்சன் துரைமணி, நாசரேத் ஜூலியட், பத்மாவதி, லெட்சுமன பெருமாள், ஆலோசனை மரியான், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, நட்டார்முத்து, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கருப்பசாமி, அன்புராஜ், பழனிச்சாமி, அழகர்சாமி, போடு சாமி, ராமச்சந்திரன், தனஞ்செயன், தனவதி பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், அசோக்குமார், செந்தில் ராஜகுமார், ராஜ்குமார், முத்துராஜ், ராமசாமி, மாரிமுத்து மகளிர் அணி நிர்வாகிகள் அந்தோணி கிரேசி, பேச்சியம்மாள், இந்திரா, மெஜூலா, சாந்தி, தமிழரசி, ராஜேஸ்வரி, அன்ன பாக்கியம், சன்முகத்தாய், முத்துலெட்சுமி, ஷாலினி, ஸ்மைலா, சண்முகத்தாய், சந்திரா, சத்யா லட்சுமணன், சுகந்தன் ஆதித்தன் தலைமை பேச்சாளர் முருகானந்தம், முத்துச்சாமி பால்துரை, பாஸ்கர், திருத்துவசிங் பாண்டி, செல்வராஜ், மாடசாமி, உதயசூரியன் சங்கர், அசோகன், ரெங்கன், வக்கீல் ராஜ்குமார், சேவியர் ராஜ், சேசுராஜ், மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா பாலஜெயம் சாம்ராஜ், சகாயராஜா ஐடி விங் சொக்கலிங்கம், மோகன், கிரிதர் ஆறுமுகசாமி, ராஜ் சரவணவேல், உள்பட பலா் கலந்து கொண்டனா் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ் நன்றியுரையாற்றினார்