தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி பாலிக்டெக்னிக் எதிாில் உள்ள பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நடவு செய்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆல்கன் டிரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலத்தலைவர் மருதப்பெருமாள். செயலாளர் ஜெபராஜ், மாவட்ட திமுக பிரதிநிதி நாராயணன், வட்டச்செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட பலர் கலந்து கொண்டனா்.