எஸ்.பி. மாரியப்பன் நாடார் அவர்கள் காமராஜர் லட்சிய பேரவை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
காமராஜர் லட்சிய பேரவை சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக போராளியும், பெருந்லைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனருமான எஸ்.பி. மாரியப்பன் நாடார் அவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலன், மக்கள் உரிமைகள் மற்றும் தற்போதைய சமூக பிரச்சினைகள் குறித்து அவர் முக்கிய உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, காமராஜர் லட்சிய பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரை அன்புடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.