தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு இதில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய மின்னணு கழிவுகளை சேகரித்து அதை மீண்டும் மறுசுழற்சி செய்யும் வகையில் சூழல் சிங்கம் என்ற அமைப்பை நிறுவியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக மாவட்ட முழுவதும் மின்னணு கழிவுகள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்லூரி மாணவ மாணவிகளிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வகையிலும் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து மின்னணு கழிவுகளை பெறுவதற்கான அமைப்பை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வஉசி கல்லூரியில் நடைபெற்றது கனிமொழி எம்பி பாரி – ஈ பின் என்ற அமைப்பை தொடங்கி வைத்து அதன் இணையதளத்தையும் தொடங்கி வைத்து பேசுகையில் பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் பாதிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் உலக அளவில் நாம் அச்சப்படக்கூடிய ஒன்றாகவும் காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் அறிவோம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்களை வெட்டுவது மாசு ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலையில் அமைப்பது உள்ளிட்ட வெயில் காரணமாகவும் கடற்கரையில் நாம் வீசிய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் காரணமாகவும் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதற்குக் காரணம் நாம் நவீன பொருட்களின் பயன்படுத்துவது காரணம் மேலும் நவீன சாதனங்களின் நாம் பயன்படுத்துவதும் குறைந்த கால அளவு தான் அதை அதிக காலத்திற்கு பயன்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும் இந்த காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பம் அதிக மழை போன்றவற்றால் நாம் பாதிப்புள்ளாய் வருகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதன் காரணமாகத்தான் மின்னணு கழிவுகளை குறைக்க முடியும் மேலும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, வ உ சி கல்லூரி முதல்வர் வீரபாகு சூழல் சிங்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஷ்னோரா உள்பட பலா் கலந்து கொண்டனர்