தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீா் பிரச்சனை சிலகுறைபாடுகளின் காரணமாக நிலவி வருகிறது. தொடர் மின்வெட்டு காரணமாகவும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் இல்லாததாலும் குடிதண்ணீா் பிரச்சனை கடந்த ஒரு வார காலமாகவே இருந்து வருகிறது. விரைவாக சரி செய்யப்பட்டு விடும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தொிவித்திருந்தாா்.
குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக தொடர்ந்து பல பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி இரவு 11 மணி அளவில் களத்தில் இறங்கினார். தனசேகரன் நகர். குறிஞ்சி நகர். பக்கீல் ஓடை ஒட்டியுள்ள பகுதிகள். கே வி கே நகர் ஆகிய பகுதிகளில் இரவு 11 மணிக்கு குடிநீர் சப்ளை கொடுக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக நேரில் சென்று குடி தண்ணீர் வருகிறதா என்று குடிநீர் பைப்பை திறந்து வீடு தோறும் பார்வையிட்டார். தண்ணீர் நல்ல முறையில் வருகிறதா எப்படி வருகிறது என்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பொது மக்களிடம் நோில் கேட்டறிந்தாா் இரவு 11 மணிக்கு துவங்கி வீடுகள் தோறும் செல்லும் குடிநீர் சப்ளை விநியோகம் பணியை அதிகாலை 1 30 வரை ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் சப்ளை வருவது தொடர்பாக வீட்டில் உள்ளவர்களிடம் குடிநீர் எப்படி வருகிறது என்று நேரில் ஆய்வு மேற்கொண்டார் சுமார் மூன்று மணி நேரம் நடு இரவில் ஒன்பது தெருவுக்கு வீடுகள் தோறும் சென்று ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் எப்படி வருகிறது முன்பு எப்படி வந்தது தற்போது வருவது போல இனி குடிநீர் வரும் என்று ஒவ்வொரு வீட்டு பொதுமக்களிடம் கூறினார்.
இதுகுறித்து தனசேகரன் நகரை சேர்ந்த ஒருவர் கூறுகையில் நான் இந்தப் பகுதியில் 18 வருடமாக குடியிருந்து வருகிறேன். இதுவரை தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்தவர்கள் காலை நேரத்தில் தான் ஆய்வு மேற்கொண்டு வருவார்கள் 2021ம் ஆண்டு வரை குடிநீர் பிரச்சனைக்காக நாங்கள் தொடர்ந்து சாலை மறியலில் எல்லாம் ஈடுபட்டு வந்தோம் ஆனால் தற்போது கடந்த நான்கு வருட காலமாக இந்த பகுதிக்கு குடிநீர் பிரச்சினை இல்லை ஆனால் இதுவரை மேயராக இருந்த யாரும் இரவு நேரத்தில் வீட்டுக்கு வீடு வந்து குடிநீர் வருகிறதா என்று கேட்டது கிடையாது ஆனால் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி இரவு 12 மணி அளவில் வீட்டின் காலிங் பெல் அடித்து குடி தண்ணீர் வருகிறதா என்று எங்களிடம் கேட்டார் எங்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது உடனடியாக குடிதண்ணீர் வருகிறதா என்று பைப்பை பார்த்தோம் நன்றாக வருகிறது இப்படி ஒரு மேயரை நாங்கள் பார்த்ததில்லை மனதார பாராட்டுகிறேன் என்று கூறினார்.
குறிஞ்சி நகரை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் நடு இரவு ஒரு மணி அளவில் காலிங் பெல் அடித்தவுடன் வீட்டுக்குள் நின்று யார் என்று கேட்டேன் நான்தான் மேயர் ஜெகன் பொியசாமி வந்துள்ளேன் என்று கூறினார் உடனடியாக என்ன என்று கேட்டேன் உங்கள் வீட்டில் குடிநீர் எப்படி வருகிறது என்று பாருங்கள் என்றார் கதவைத் திறந்தவுடன் அவரே வீட்டுக்குள் வந்து எங்கள் வீட்டின் முன்பு போடப்பட்டிருக்கும் குடிநீர் ஜம்பு திறந்து பார்த்து தண்ணீர் எப்படி வருகிறது என்று பார்த்தாா் நன்றாக தண்ணீர் வந்தது இதுபோல இனி தொடர்ந்து தண்ணீர் வரும் என்று கூறினார் என்று அந்தப் பெண் கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி 3 மணி நேரம் பல்வேறு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று குடிநீர் விநியோகம் குடிநீர் எப்படி வருகிறது சென்று கேட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இருந்தாலும் நடு இரவு என்பதை பொருட்படுத்தாமலும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடு இரவு 3 மணி நேரம் 9 தெருக்களுக்கு சென்று வீடு வீடாக குடிநீர் விநியோகத்தை பார்வையிட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது