தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது செஞ்சி முல்லை நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகளை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, சாதாரண உள்ளூர் பிரச்சனை அல்ல அது மக்களின் அடிப்படை வாழ்வுரிமை குடிநீர் என்பது மக்களுக்கு அரசு தரும் சலுகை அல்ல அது அடிப்படை உரிமை. அதேபோல் கழிவுநீர் வாய்க்கால், சுத்தம், சுகாதாரம் போன்றவை ஒரு பகுதி மக்களின் ஆரோக்கியத்துடன் வாழ தொடர்புடையவை. இவை இல்லாதபோது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் சாலை மறியல் செய்யும் நிலைக்கு வருகிறார்கள் என்றால், அவர்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக கேட்கப்படாமல் உள்ளது என்பதற்கே அது சாட்சி. அதிகாரிகள் மக்களின் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தால், மக்கள் தெருவில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. செஞ்சி முல்லை நகர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் தெளிவான நிலைப்பாடு என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
முல்லை நகர் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் வலியுறுத்தல்