Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்

Last updated: June 25, 2026 9:06 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீதான மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆதாரங்களுடன் முன்வைத்து நியாயமான கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம். ஆனால், முதலமைச்சருக்கான மாண்புகளை மறந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் பிதற்றல்களை மட்டுமே முதலமைச்சர் விஜய் சபையில் முன்வைத்துள்ளார். மாநிலத்தில் ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்குப் பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். பாஜகவுடன் இணக்கமாக இருந்துகொண்டு, திமுகவை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் தவெகவின் பின்னணி என்ன என்பது அம்பலமாகியுள்ளது. திமுக இத்தகைய வெற்று வாய்ச்சவால்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் இருந்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சட்டமன்றத்தில் ஏளனமாகத் தனிநபர் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சபையில் இல்லாத ஒரு தலைவரைப் பற்றி இதுவரை சட்டமன்றத்தில் இவ்வளவு அநாகரிகமாக யாரும் பேசியதில்லை. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளைத் தவெகவிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டமன்றத்திற்கென்று உள்ள தனி மாண்பை மறந்து, அதைச் சிரித்து விசிலடிக்கும் பொழுதுபோக்கு மன்றமாக முதலமைச்சர் விஜய் மாற்றிவிட்டார். அங்கு அமைச்சர்கள் டூயட் பாடல்களுக்கு ஆடுகிறார்கள், எம்எல்ஏக்கள் விசில் அடிக்கிறார்கள், முதலமைச்சர் நாடகத்தை அரங்கேற்றுகிறார். தங்களது தலைவரின் உத்தரவின் பேரிலேயே திமுகவினர் கண்ணியத்துடன் விமர்சிப்பதாகவும், தவெக பாணியில் பேசத் தெரியாமல் இல்லை என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் எச்சரித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் தேனிக்கு மாற்றம்
Next Article ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Dinapuratchi
குற்றம்தற்போதைய செய்திதூத்துக்குடி

“யாரும் பேச கூடாது, யாரும் தண்ணீர் கொடுக்க கூடாது” என ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?