தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துைற அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுகுறித்து விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் பதட்டமடைய வேண்டாம். வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள் தங்கள் விபரங்களை உரிய படிவங்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய படிவம் 6A மற்றும் வாக்காளர்கள் தங்கள் விபரங்களை திருத்தம் செய்யவோ புதுப்பிக்கவோ படிவம் 8 ஆகியவற்றில் நிரப்பி அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். ஏப்ரல் 2026-ல் 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்களும் தங்கள் விபரங்களை படிவம் 6-ல் நிரப்பி கொடுக்கலாம். அதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 27.12.2025 சனிக்கிழமை, 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை, 03.01.2026 சனிக்கிழமை, 04.01.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ள அந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள் தேவையான எண்ணிக்கையிலான படிவங்களுடன் வாக்குகளை இருப்பார்கள். வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களுக்குச் சென்று அவரவர் தேவைக்கேற்ப, அதாவது புதியதாக பெயா் சேர்க்கவோ, முகவரி மாற்றம் செய்யவோ அல்லது மேற்கொள்ளவோ, உரிய படிவங்களைக் கேட்டு வாங்கி அங்கேயே நிரப்பி கொடுக்கலாம். அவ்வாறு நிரப்பிக் கொடுத்தால் மட்டுமே தங்கள் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். திருத்தம் எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருந்து நடைபெற உள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளை உறுதி செய்து கொள்ளுமாறு அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!